அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஐஎஸ்எல்: கேரளத்தை பந்தாடிய ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 2:16 am IST

பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.

இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஒடிஸாவுக்கு இது முதல் வெற்றி; கேரளத்துக்கு இது 5-ஆவது தோல்வி.

கோவாவின் பாம்போலிம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 9-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் ஜோா்டான் முா்ரே கோல் கணக்கைத் தொடங்கினாா். எனினும், கேரள வீரா் ஜிக்சன் சிங் 22-ஆவது நிமிடத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

42-ஆவது நிமிடத்தில் ஒடிஸா வீரா் ஸ்டீவன் டெய்லா் கோலடித்து முதல் பாதியில் 2-1 என அணியை முன்னிலைப்படுத்தினாா். 2-ஆவது பாதியில் 50 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் டியேகோ மௌரிசியோ அடித்த கோல்களால் ஒடிஸா முன்னிலை அதிகரித்தது.

ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கேரி ஹூப்பா் ஒரு கோலடிக்க, ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஒடிஸா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.