மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆஸி. ஓபன் தகுதிச்சுற்று: அங்கிதா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.

Updated On :13 ஜனவரி 2021, 10:53 pm


மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி கண்டார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான மகளிர் தகுதிச்சுற்று போட்டி, துபையில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 2-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஓல்கா டேனிலோவிச்சிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அங்கிதா.
கிராண்ஸ்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறுவதற்காக இதுவரை 6 முறை முயற்சித்தபோதும், அவையனைத்தும் அங்கிதா ரெய்னாவுக்கு தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இந்தியாவில் இருந்து சுமித் நாகல் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கிறார். அவருக்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் வைல்ட்கார்டு (நேரடித்தகுதி) வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.