அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்த கேரள வீரர்: 11 சிக்ஸர்கள் அடித்த அதிரடி ஆட்டத்தின் விடியோ

ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிற நேரத்தில் அசாருதீனைத் தேர்வு செய்ய...

News image
Updated On :14 ஜனவரி 2021, 10:56 am IST

மும்பைக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 ஆட்டத்தில் கேரள அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேரள தொடக்க வீரர் அசாருதீன் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. ஜெயிஸ்வால் 40 ரன்களும் ஆதித்ய தாரே 42 ரன்களும் எடுத்தார்கள். ஜலஜ் சக்ஸேனா, ஆசிஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

கேரள அணியின் தொடக்க வீரர் அசாருதீன், அதிரடியாக விளையாடி மும்பை பந்துவீச்சைத் திணறடித்தார். பவர்பிளேயில் கேரள அணி, 6 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்தது. 20 பந்துகளில் அரை சதம் எடுத்தார் அசாருதீன். இதன்பிறகு சிக்ஸர் மழை பொழிந்து 37 பந்துகளில் சதமடித்தார். இதனால் கடினமான இலக்கை 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது கேரள அணி. அசாருதீன் 54 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் இது 2-வது அதிவேக சதமாகும். இதற்கு முன்பு 2018-ல் ரிஷப் பந்த், 32 பந்துகளில் ஹிமாசலப் பிரதேசத்துக்கு எதிராக சதமடித்தார். 

இந்திய உள்ளூர் போட்டிகளில் இதுவரை எந்தவொரு ஆட்டத்திலும் மும்பையை கேரள அணி ஜெயித்ததில்லை. அசாருதீனின் மறக்க முடியாத ஆட்டதால் கேரள அணி மும்பைக்கு எதிராக முதல்முறையாக வெற்றி கண்டது. ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிற நேரத்தில் அசாருதீனைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் போட்டி போடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.