சென்னை, ஏப். 5: இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதற்கு, வீரர்களின் குழு முயற்சியே காரணம் என இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் "லாரன்ஸ் அண்டு மாயோ' என்ற கண் கண்ணாடிக் கடையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அவர், இதுகுறித்து மேலும் கூறியது:உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதற்கு வீரர்களின் குழு முயற்சியே காரணம். தேர்வுக் குழு தலைவராக நான் இருக்கும்போது, உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
இதன் உண்மையான மதிப்பை இப்போது உணரமாட்டோம். மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்று விடுவோம். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உலகக் கோப்பையை வென்றதன் உண்மையான மதிப்பை அனைவரும் உணர்வோம்.
உலகக் கோப்பை போட்டிகள் முழுவதிலும் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோல் காம்பீரும் சிறப்பாக விளையாடினார். ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை ஆல்-ரவுண்டர் நிலை என்பது மிகவும் சவாலானது. அந்த சவாலை மிகச் சிறப்பாக யுவராஜ் சிங் கையாண்டார். இறுதி ஆட்டத்தில் நிலைமையை உணர்ந்து, கேப்டன் தோனி செயல்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


