

இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்த இந்திய வீரர் ராயுடு, ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 20 வயது கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராயுடுவுக்கு 3 வாரம் வரை ஓய்வு தேவைப்படுவதால் அவருக்குப் பதிலாக மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் ஆடுவார் என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் 124*, 41 என ரன்கள் குவித்து இந்திய அணிக்குப் பலமாக உள்ளார் ராயுடு. சஞ்சு சாம்சன் இதுவரை இந்திய அணிக்காக ஒரு சர்வதேசப் போட்டியிலும் ஆடியதில்லை. அதனால் இந்தத் தொடரில் நிச்சயம் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.