தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கும் சச்சின் பாராட்டு!

விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 ஜூலை 2015, 12:16 pm

விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற 3 இந்தியர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி, பெயா - பபோஸ் ஜோடியை 6-1, 6-1 என நேர் செட்களில் எளிதான முறையில் வெற்றி கண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றது. 42 வயதான பெயஸுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ஜுனியர் விம்பிள்டன் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் - நாம் ஹோங்லி (வியட்நாம்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள சுமித் - ஹோங்லி ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள ரெய்லி ஓபெல்கா (அமெரிக்கா) - அகிரா சான்டில்லன் (ஜப்பான்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் சுமித் ஜோடி, 7-6(4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதான சுமித் நாகல் புது தில்லியை சேர்ந்தவர் ஆவார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் சானியா மிர்ஸா. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, ரஷியாவின் எகர்டினா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. மொத்தத்தில் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் 5-7, 7-6 (7/4), 7-5 என்ற செட் கணக்குகளில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று விம்பிள்டன் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாறு படைத்தார் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.

இந்த மூன்று இந்தியர்களின் சாதனைகளுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக  சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.