ஹராரேவில் இன்று நடக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.
இந்திய அணியில் மனிஷ் பாண்டே இடம்பிடித்துள்ளார். இது அவருடைய முதல் சர்வதேச போட்டி ஆகும். மேலும், குல்கர்னிக்குப் பதிலாக மோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலில் நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.