முன்னாள் நீதிபதி லோதாவின் ஐபிஎல் சூதாட்டப் புகார் மீதான தீர்ப்பை அடுத்து சென்னை சூப்பர் அணியால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல்-லில் பங்கேற்கமுடியாது. இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் அல்லது சென்னை அணி சார்பாக யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் ஒரு தகவல் சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது, லோதா தீர்ப்புக்குப் பிறகு ஒரு ட்வீட் செய்தார். சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம். படம் இன்னமும் மீதமுள்ளது என்று ட்வீட் செய்தார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடியால் உடனடியாக ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் ஆர்வத்துடன் உள்ளதாக அறிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.