தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை போட்டி: தோல்வியைத் தவிர்க்க இந்தியா ஏ அணி போராட்டம்!

அதிகபட்சமாக முகுந்த் 59 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 31, ஸ்ரேயாஸ் ஐயர் 48, நமன் ஓஜா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

News image
Updated On :31 ஜூலை 2015, 12:24 pm

இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 3-வது நாளின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஏ அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. ஓ'கீஃபி 36 ரன்களுடனும், பெக்கீட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 349 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் பாபா அபரஜித் 5 விக்கெட்டுகளையும் ஓஜா 4 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி, 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தமுறை சிறப்பாக ஆடிய விராட் கோலி, 45 ரன்களில் அவுட் ஆனார். இந்தியா ஏ அணி பேட்ஸ்மேன்கள் பலரும் சிறப்பாக ஆடினாலும் களத்தில் யாராலும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.

அதிகபட்சமாக முகுந்த் 59 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 31, ஸ்ரேயாஸ் ஐயர் 48, நமன் ஓஜா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

3-வது நாளின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. அபரஜித் (28), ஸ்ரேயாஸ் கோபால் (0) ஆகியோர் களத்தில் உள்ளார்கள். 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள இந்தியா ஏ அணியின் விக்கெட்டுகளைக் குறைந்த ரன்களுக்குள் எடுத்துவிட்டால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.