

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கமிட்டி)-யின் வருடாந்தர கூட்டம் நேற்று நடந்தது. ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட்சன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், டெக்னிக்கல் கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் ஒருநாள் போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரிச்சர்ட்சன் தெரிவித்ததாவது:
* இனி பேட்டிங் பவர்பிளே கிடையாது.
* கடைசி 10 ஓவர்களுக்கு (40-50) வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களை நிறுத்திக்கொள்ளலாம். அதாவது முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள்; 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள்; 40-50 ஓவர்களின்போது 5 ஃபீல்டர்கள் இருப்பார்கள்.
* முதல் 10 ஓவர்களில், 2 கேட்சர்களை பேட்ஸ்மேனுக்கு அருகில் நிறுத்தவேண்டிய அவசியமில்லை.
* அனைத்து வகை நோபால்களும் இனி ஃப்ரீஹிட்
இந்த விதிமுறைகள் ஜூலை 5 முதல் அமலுக்கு வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.