உலக இளையோர் (யூத்) செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
கிரீஸின் போர்டோ கராஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகாலட்சுமி (மகளிர் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவு), வைஷாலி (14 வயது பிரிவு), பிரக்னானந்தா (ஆடவர் 10 வயது பிரிவு), ரக்ஷிதா ரவி (மகளிர் 10 வயது பிரிவு), பாரத் சுப்பிரமணியம் (8 வயது பிரிவு, ஓபன்) ஆகியோர் தங்கம் வென்றனர்.
நிஹால் சரின் (12 வயது, ஓபன்), தேவ் ஷா (8 வயது, ஓபன்) வர்ஷினி (மகளிர் 18 வயது) ஆகியோர் வெள்ளியும், வந்திகா அகர்வால் (மகளிர் 14 வயது), சாய்னா சலோனிகா (மகளிர் 12 வயது), திவ்யா தேஷ்முக் (மகளிர் 10 வயது) ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 12 பிரிவுகளில் 50 பேர் கலந்து கொண்டனர்.