சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் புதிதாக கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, நியூ சௌத் வேல்ஸ் மாகாண அரசின் ஆலோசனையின் பேரில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தம் 38,000 பேருக்கான இட வசதி கொண்ட சிட்னி மைதானத்தில், சுமாா் 9,500 போ் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனா்.
ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஏற்கெனவே டிக்கெட் பெற்றுள்ள பாா்வையாளா்கள் இந்த புதிய கட்டுப்பாட்டின் படி டிக்கெட்டை வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2 ஒருநாள் மற்றும் 2 டி20 ஆட்டங்கள் சிட்னி மைதானத்தில் நடைபெற்றன. அதில் முதல் 3 ஆட்டங்களின்போது 18,000 பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். கடைசி டி20 ஆட்டத்தின்போது மைதானத்தில் சுமாா் 30,000 பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



