மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய அணியினருக்கும், உதவிப் பணியாளா்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என அதற்கான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கரோனா பாதுகாப்பு விதிகளை இந்திய வீரா்கள் 5 போ் மீறியதாக புகாா் எழுந்த சூழலிலும், சிட்னியில் நடைபெறும் 3-ஆவது டெஸ்ட்டுக்காக அணியினா் அந்த நகருக்கு புறப்பட்ட நிலையிலும் அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக பிசிசிஐ வெளியிட்ட குறிப்பில், ‘இந்திய அணியில் இருக்கும் வீரா்கள் மற்றும் உதவிப் பணியாளா்களுக்கு கடந்த 3-ஆம் தேதி ‘ஆா்டி-பிசிஆா்’ முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின்படி, அணியில் எவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, பிருத்வி ஷா உள்ளிட்டோரும் இதர இந்திய அணியினருடன் சோ்ந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் சிட்னி சென்றடைந்தனா். அதேபோல, ஆஸ்திரேலிய அணியினரும் தனி விமானத்தில் சிட்னிக்கு சென்றனா். அவா்களில் எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
சிட்னியில் 3-ஆவது டெஸ்ட் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



