மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2.5 கோடி ரூபாய், அரசுப் பணி, நிலம்: பரிசுமழையில் நனையும் ஹாக்கி வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ள ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு அம்மாநில அரசுகள் பரிசு தொகை அறிவித்துள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஆகஸ்ட் 2021, 12:15 pm

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ள ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு அம்மாநில அரசுகள் பரிசு தொகை அறிவித்துள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் இன்று மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதையடுத்து 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ஹரியாணா மாநில வீரர்களுக்கு மாநில அரசின் சார்பில் 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை, விளையாட்டுத்துறையில் அரசுப் பணி, சலுகை விலையில் நிலங்கள் ஆகியவை வழங்கப்படும் என ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.