பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாட்டிற்காக விளையாடியதில் மகிழ்ச்சி; ஒலிம்பிக் அனுபவம் மிகச் சிறந்தது: பவானி தேவி

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதில் கிடைத்த அனுபவம் மிகப்பெரியது என்றும் வாள் வீச்சு வீராங்கனை பவானி தெரிவித்துள்ளார். 

News image
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (கோப்புப் படம் )
Updated On :27 ஜூலை 2021, 11:30 am

DIN

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதில் கிடைத்த அனுபவம் மிகப்பெரியது என்றும் வாள் வீச்சு வீராங்கனை பவானி தெரிவித்துள்ளார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சு பிரிவில் முதல்முறையாக இந்தியா சார்பில் பவானி தகுதி பெற்று போட்டியில் கலந்துகொண்டார். 

தனிநபா் சப்ரே பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில்,  2-ஆவது சுற்றில் போராடி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும், அதில் நிறைய கற்றுக்கொண்டதாக பவானி தேவி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ஒலிம்பிக் போட்டியில் எனது பங்களிப்பை அளித்தேன். எனினும் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துவிட்டேன். அது எனக்கு மனச்சோர்வை அளித்தது. 

எனினும் ஒலிம்பிக் பயிற்சி மற்றும் ஒலிம்பிக் விளையாட்டின்போது கிடைத்த அனுபவத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். ஒலிம்பிக் வரை வருவது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு போட்டியிலும் நாம் நம்மை மெருகேற்றிக்கொள்ள முடியும். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிற்காக தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்லாது, எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்காக தங்கம் வெல்ல வேண்டும். எதிர்காலத்தில் வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.