இலங்கை வீரருக்கு கரோனா

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்  பதும் நிஷாங்காவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்  பதும் நிஷாங்காவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை அணியின் தொடக்க வீரர்  பதும் நிஷாங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்த கரோனா பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை கோவிட் காரணத்தினால் இலங்கை அணி 5 வீரர்களை டெஸ்ட் தொடரில் இருந்து இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிடிக்கெட் நிர்வாகம் இதுக்குறித்து கூறியதாவது: 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  பதும் நிஷாங்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com