மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சதத்தை தந்தைக்கு சமர்ப்பணம் செய்த நியூசிலாந்து வீரர்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில் இச்சதத்தினை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2022, 5:16 pm IST

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில் இச்சதத்தினை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். 

நியூசிலாந்து அயர்லாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடி வந்தது. 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 360 ரன்களை குவித்தது. இதில் மார்டின் கப்டில் 115 ரன்களை எடுத்தார். இதில் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம். இது அவரது 18வது சதம் ஆகும். 

கடினமான இலக்கை தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி அபாரமாக விளையாடி 359 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தொல்வியுற்றது. இதில் பால் ஸ்டிரிலிங் 120 ரன்களும், ஹேரி டெக்டர் 108 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் அடுத்து 3 டி20 போட்டிகள் விளையாட இருக்கிறது. 

ஆட்டநாயகன் விருது பெற்ற மார்டின் கப்டில் கூறியதாவது: 

75 ரன்கள் வரை நன்றாக விளையாடினேன். பிறகு என்னால் ஒழுங்காக விளையாட முடியவில்லை. இருப்பினும் இந்த சதம் முக்கியமானது. 5 வருடங்களுக்கு முன்பு எனது தந்தையை இழந்தேன். இந்த சதம் அவருக்காக சமர்ப்பணம். குறைவான ஓவர் கொண்ட விளையாட்டில் விளையாடுவது விருப்பமாக இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.