தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 6:12 am

Ravivarma.s

தில்லி கேபிடல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்க தவறியதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை இரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த தில்லி அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், ஐபிஎல் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்க தவறியதால் தில்லி அணியின் கேப்டனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சென்னை அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், விபத்துக்கு பிறகு தனது முதல் அரைசதத்தை அடித்து அசத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.