தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஐபிஎல் 2025: கொல்கத்தா அணி கேப்டனாக ரஹானே? புதிய திருப்பம்!

ஐபிஎல் 2025: கொல்கத்தா அணி கேப்டனாக ரஹானே? புதிய மாற்றம்!

News image

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :2 டிசம்பர் 2024, 12:39 pm

அடுத்தாண்டு கோடை கால விடுமுறை நாள்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ‘இந்தியன் ப்ரீமியர் லீக்(ஐபிஎல்)’ தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தாங்கள் விரும்பும் வீரர்களை கடந்த மாதம் இரு நாள்களாக நடைபெற்ற மெகா ஏலத்தில் பல கோடிகளை கொடுத்து எடுத்துக் கொண்டன.

Story image

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சீசன்களில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் அஜிங்க்ய ரஹானே இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 1.50 கோடி கொடுத்து நடிகர் ஷாருக் கானின் கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த சீசன்களில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியல் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த நிலையில், கேகேஆர் அணியில் கேப்டன் பொறுப்பு யாருக்கு? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடி கொடுத்து கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்துள்ள போதும், அவரை விடுத்து ரஹானேவையே கேப்டனாக்க முனைப்பு காட்டி வருவதாக கேகேஆர் அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த அணி தரப்பிலிருந்து ஒருவர் கூறியதாவது, “கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக அஜிங்க்யா ரஹானே வழிநடத்துவார் என்பது 90 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல். அணியை வழிநடத்தும் பொறுப்பு ரஹானேவுக்கு இருப்பதை ஒரு காரணமாக கருத்திற்கொண்டே அவர் இம்முறை கேகேஆர் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.