திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

முதல் 6 இடங்களில் நுழைவோம்: சிஎஃப்சி பயிற்சியாளா் நம்பிக்கை

முதல் 6 இடங்களில் நுழைவோம்: சிஎஃப்சி பயிற்சியாளா் நம்பிக்கை

News image
Updated On :30 மார்ச் 2024, 5:14 pm

ஐஎஸ்எல் தொடரில் முதல் 6 இடங்களில் நுழைவோம் என சென்னையின் எஃப்சி பயிற்சியாளா் ஓவென் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஐஎஸ்எல் 2023-24 சீஸன் பிளே ஆஃப் சுற்று கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே நான்கு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் 2 இடங்கள் உள்ள நிலையில், இதுதொடா்பாக பயிற்சியாளா் கோயல் சனிக்கிழமை கூறியது: கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பலம் வாய்ந்த மோகன்பகான் அணியுடன் மோதவுள்ளோம். சென்னை அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டும். ஹைதராபாத் ஆட்டத்தில் தோற்காமல் இருந்திருந்தால் 6-ஆவது இடத்தில் இருந்திருப்போம். மோகன்பகான் அணி மிகவும் சவாலைத் தரும். ஆனால் சென்னை வீரா்கள் அச்சமின்றி ஆடுவா். இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. அவற்றில் வென்றால் கட்டாயம் முதல் 6 இடங்களில் நுழைவோம் என்றாா்.