வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்துமா இந்தியா? 172 ரன்கள் குவிப்பு!

இலங்கை அணி வெற்றி பெற 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

News image
Updated On :9 அக்டோபர் 2024, 3:56 pm

DIN

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று(அக். 9) பலப்பரீட்சை நடத்துகின்றன. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் திரட்டியது.

இந்திய அணியில் ஷஃபாலி வர்மாவும் ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஷஃபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஸ்மிரிதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தன் பங்குக்கு மட்டையை சுழற்ற, இந்திய அணியின் ஸ்கோர் அசுர வேகத்தில் எகிறியது. இலங்கை அணியின் பந்துவீச்சை எல்லைக் கோட்டிற்கு அப்பால் பறக்கவிட்ட ஹர்மன்ப்ரீத் கௌர் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 173 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.