ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக்கிறது.
ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், பிரீதிகா ஆகியோருடன் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற காலிறுதியில் 235-226 என எல் சால்வடோரை சாய்த்தது. அடுத்து அரையிறுதியில் 230-226 என இந்தோனேசியாவை வீழ்த்தியது.
அடுத்து இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபே அணியை இந்தியா சனிக்கிழமை சந்திக்கிறது.
இதனிடையே, ரிஷப் யாதவ், பிரதமேஷ் ஃபுகே, அமன் சைனி ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் காம்பவுண்ட் அணி, காலிறுதிச்சுற்றிலேயே 233-234 என மெக்ஸிகோவிடம் தோல்வியைத் தழுவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்திகள் சில வரிகளில்...

ஹைதராபாதில் வில்வித்தை ப்ரீமியா் லீக்
இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடர்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய வில்வித்தை அணி அறிவிப்பு
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



