தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி

News image
Updated On :9 ஜூலை 2025, 11:49 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக்கிறது.

ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், பிரீதிகா ஆகியோருடன் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற காலிறுதியில் 235-226 என எல் சால்வடோரை சாய்த்தது. அடுத்து அரையிறுதியில் 230-226 என இந்தோனேசியாவை வீழ்த்தியது.

அடுத்து இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபே அணியை இந்தியா சனிக்கிழமை சந்திக்கிறது.

இதனிடையே, ரிஷப் யாதவ், பிரதமேஷ் ஃபுகே, அமன் சைனி ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் காம்பவுண்ட் அணி, காலிறுதிச்சுற்றிலேயே 233-234 என மெக்ஸிகோவிடம் தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.