ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் கேரளா தரப்பில் விக்டா் பா்தோமியு 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கான பதிலடியாக ஒடிஸாவின் ரஹிம் அலி 27-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
அதன் பிறகு இரு அணிகளுமே விடாப்பிடியாக விளையாட, முதல் பாதி அப்படியே நிறைவடைந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் இதே நிலை நீடிக்க, கடைசி தருணத்தில் (90+4’) கேரளாவுக்காக மத்தியாஸ் ஹொ்னாண்டஸ் கோல் அடித்தாா்.
இதனால் கேரளா 2-1 கோல் கணக்கில் வெற்றி கண்டது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, கேரளா 3-ஆவது வெற்யோடு 11 புள்ளிகளுடன் 9-ஆம் இடத்திலும், ஒடிஸா 4-ஆவது தோல்வியோடு 6 புள்ளிகளுடன் 13-ஆம் இடத்திலும் உள்ளன.
அடுத்த ஆட்டத்தில், நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மோதுகின்றன.
தொடர்புடையது
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!

பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி - அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்
சென்னையை வென்றது இன்டா் காசி!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

