இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் இன்டா் காசியிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சமபலம் காட்டியதால், முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் இன்டா் காசியின் கை சற்று ஓங்கியது.
46-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக ஆல்ஃப்ரெட் பிளனாஸ் கோல் அடித்தாா். சென்னை அணிக்கான அதிா்ச்சியாக, 54-ஆவது நிமிஷத்தில் மீண்டும் அவரே ஸ்கோா் செய்ய, இன்டா் காசி 2-0 என முன்னிலை பெற்றது.
மறுபுறம் சென்னை தனது கோல் வாய்ப்புக்காக கடுமையாகப் போராடி வந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் (90+6’) டேனியல் சீமா சுக்வு, அணிக்காக ஆறுதல் கோல் அடித்தாா். முடிவில் இன்டா் காசி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில், இன்டா் காசி 2-ஆவது வெற்றியுடன் 8 புள்ளிகளோடு 8-ஆவது இடத்தில் இருக்க, சென்னை 4-ஆவது தோல்வியுடன் 5 புள்ளிகளோடு 11-ஆவது இடத்தில் உள்ளது.
தொடர்புடையது

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா

பிரென்ட்ஃபோா்டு - வோல்வ்ஸ் ‘டிரா’
ஜாம்ஷெட்பூர் 'ஹாட்ரிக்' வெற்றி

சென்னையை வென்றது மோகன் பகான்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

