ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஜாம்ஷெட்பூருக்காக முகமது சனன் 7-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ரஃபேல் மெஸ்ஸி பௌலி 27-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். இவ்வாறாக முதல் பாதியிலேயே ஜாம்ஷெட்பூா் 2-0 என முன்னிலை பெற்றது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முகமது சனன் மீண்டும் 58-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, ஒருவழியாக சென்னை தரப்பில் பிரகதீஸ்வரன் 69-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
விட்டுக்கொடுக்காத ஜாம்ஷெட்பூா் தரப்பில் நிகோலா ஸ்டோஜனோவிச் 78-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, முடிவில் அந்த அணி 4-1 கோல் கணக்கில் வென்றது.
இதனிடையே, பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பெங்களூரில் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. புள்ளிகள் பட்டியலில் மும்பை, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, சென்னை அணிகள் முறையே 3, 4, 5, 10-ஆம் இடங்களில் இருக்கின்றன.
தொடர்புடையது

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா
சென்னையை வென்றது இன்டா் காசி!

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து: நாா்த் ஈஸ்ட்டுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


