18-வது ஆசியப் போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சனிக்கிழமை தொடங்கின.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரியும் அபிஷேக் வர்மாவும் தங்கம், வெண்கலம் என முறையே இரு பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள்.
இதையடுத்து, ஆடவருக்கான 50 மீ. ரைஃபிள் பொசிஸன்ஸ் இறுதிச்சுற்றில் போட்டியிட்ட இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 452.7 புள்ளிகள் பெற்றார். 453.3 புள்ளிகள் பெற்ற சீனாவின் ஸிசெங் தங்கம் வென்றார்.
இந்திய அணி இதுவரை பெற்ற 8 பதக்கங்களில் (3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்), 6 பதக்கங்கள் (1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இருந்து கிடைத்துள்ளது. மல்யுத்தம் விளையாட்டில் இரு தங்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்திய அணி 7-ம் இடம் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


