சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தொடரும் இளம் வீரர்களின் பதக்க வேட்டை: வெள்ளி வென்றார் 15 வயது ஷர்துல் விஹான்!

துப்பாக்குச் சுடுதல் விளையாட்டில் இளம் இந்திய வீரர்கள் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். இதே ஆசியப் போட்டியில் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதலில்... 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2018, 9:41 am

18-வது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. 

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் டபுள் டிராப் இறுதிச்சுற்றில் இந்தியாவின் 15 வயது வீரர் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார். 

இதையடுத்து ஆசியப் போட்டியில் இந்தியா தனது 17-வது பதக்கத்தைப் பெற்றுள்ளது. இதுவரை இந்திய அணி 4 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 17 பதக்கங்களுடன் 9-ம் இடத்தில் உள்ளது. சீனா 51 தங்கம் உள்ளிட்ட 101 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

துப்பாக்குச் சுடுதல் விளையாட்டில் இளம் இந்திய வீரர்கள் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். இதே ஆசியப் போட்டியில் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 16 வயதே ஆன இளம் வீரர் செளரப் செளத்ரி போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார். அதற்கு முன்பு, டிராப் போட்டியில் இந்தியாவின் 19 வயது வீரர் லக்‌ஷய் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் 15 வயது ஷர்துல் வெள்ளி வென்றுள்ளார். இதேபோல ஏப்ரல் மாதம் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீ. ரேபிட் ஃபயர் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை செய்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.