டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம்.


News image

படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:29 pm IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களுக்கு சறுக்கியுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் கடைசி அணியாக 9-வது இடத்தில் உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 10-வது முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.