மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்: கேமரூன் கிரீன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

News image

கேமரூன் கிரீன்

Updated On :23 ஆகஸ்ட் 2024, 5:33 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் முடிந்த அளவுக்கு எனது பங்களிப்பை அணிக்காக வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன். நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். 70-வது மற்றும் 80-வது ஓவருக்கு இடையேயான ஓவர்களை வீசுவது குறித்து நானும் மிட்செல் மார்ஷும் எப்போதும் பேசி சிரித்துக் கொள்வோம். அந்த ஓவர்களில் பந்துவீச்சில் பெரிதாக வேகம் மற்றும் ஸ்விங் இருக்காது. அணிக்காக பந்துவீச்சில் எனது பங்களிப்பை வழங்குவேன். அணியில் ஆல்ரவுண்டராக எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷை பந்துவீச்சில் அதிகம் பயன்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டிருப்பதாக பாட் கம்மின்ஸ் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.