மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஷேன் வார்னேவின் மறைவு குறித்து பேசிய குல்தீப் யாதவ்!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் இழப்பு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image

குல்தீப் யாதவ் - படம் | AP

Updated On :23 ஆகஸ்ட் 2024, 4:03 pm IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் இழப்பு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அவரது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, ஷேன் வார்னேவின் சொந்த மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு குல்தீப் யாதவ் சென்றுள்ளார். அங்கு மைதானத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஷேன் வார்னேவின் சிலையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்ற குல்தீப் யாதவ் பேசியதாவது: ஷேன் வார்னே எனக்கு முன்மாதிரியாக (ரோல்மாடல்) இருந்தார். அவருடன் எனக்கு சிறப்பான நட்பு இருந்தது. ஷேன் வார்னே குறித்து யோசிக்கும்போது, என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஷேன் வார்னேவின் இழப்பு என்னுடைய குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றார்.

ஷேன் வாா்னே

ஷேன் வாா்னே

ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த ஷேன் வார்னே கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.