ஷேன் வார்னேவின் மறைவு குறித்து பேசிய குல்தீப் யாதவ்!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் இழப்பு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்படம் | AP
Published on
Updated on
1 min read

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் இழப்பு தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அவரது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, ஷேன் வார்னேவின் சொந்த மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு குல்தீப் யாதவ் சென்றுள்ளார். அங்கு மைதானத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஷேன் வார்னேவின் சிலையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

குல்தீப் யாதவ்
ஓய்வை அறிவித்த கே.எல்.ராகுல்?  சர்ச்சையாகும் இன்ஸ்டா பதிவு! 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்ற குல்தீப் யாதவ் பேசியதாவது: ஷேன் வார்னே எனக்கு முன்மாதிரியாக (ரோல்மாடல்) இருந்தார். அவருடன் எனக்கு சிறப்பான நட்பு இருந்தது. ஷேன் வார்னே குறித்து யோசிக்கும்போது, என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஷேன் வார்னேவின் இழப்பு என்னுடைய குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றார்.

ஷேன் வாா்னே
ஷேன் வாா்னே
குல்தீப் யாதவ்
ஆஸி.க்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த் முக்கிய வீரராக இருப்பார்: மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த ஷேன் வார்னே கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com