போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

News image

ஷிகர் தவான் - படம் | ஐசிசி

Updated On :24 ஆகஸ்ட் 2024, 5:25 pm IST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் சௌரவ் கங்குலிக்குப் பிறகு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்தார். இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த அவர், இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷிகர் தவானுக்கு இந்திய முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வீரேந்தர் சேவாக்

மொஹாலியில் தொடக்க ஆட்டக்காரராக எனது இடத்தை நிரப்பியதிலிருந்து இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் மிகவும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளீர்கள். ஓய்வுக்குப் பிறகான உங்களது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌதம் கம்பீர்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. எதிர்கால பயணங்களிலும் உங்களது மகிழ்ச்சி தொடர எனது வாழ்த்துகள்.

ஹார்திக் பாண்டியா

சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரேயாஸ் ஐயர்

வாழ்த்துகள். உங்களது எதிர்கால பயணங்கள் சிறக்க எனது வாழ்த்துகள்.

அனில் கும்ப்ளே

சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது சிறப்பானதாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவிஎஸ் லக்‌ஷ்மண்

மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, ஒரு சிறந்த மனிதராக ஷிகர் தவானை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மறையாக இருப்பவர். உங்களது எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகள்.

வாசிம் ஜாஃபர்

மிகப் பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஷிகர் தவான். பெருமை அல்லது பாராட்டுகள் குறித்து அதிகம் கவலை கொள்ளாமல் அணியின் நலனுக்காக விளையாடுபவர். உங்களது இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.

சுரேஷ் ரெய்னா

ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம் எண்ணற்ற சாதனைகளால் நிறைந்துள்ளது. அவருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய தருணங்கள் மறக்க முடியாதவை. உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.