3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும்: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :22 டிசம்பர் 2024, 3:57 pm IST

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. இதனையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இரண்டாவது போட்டிக்கு ரோஹித் சர்மா அணியில் இணைந்தபோதிலும், கே.எல்.ராகுலே தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்தார்.

கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாட, ரோஹித் சர்மா 6-வது வீரராக களமிறங்கினார். 6-வது வீரராக களமிறங்கி கடைசி 3 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 10, 3 மற்றும் 6 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாட வேண்டும்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6-வது இடத்தில் பெரிதாக சோபிக்காத நிலையில், ரோஹித் சர்மா அவரது யுக்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அதிரடியாக விளையாட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி - கோப்புப் படம்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அவரது யுக்திகளை சிறிது மாற்றிக் கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில், அவரால் 6-வது இடத்தில் களமிறங்கி மிகவும் அதிரடியாக விளையாட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்துவீச்சை அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் மனநிலையை ரோஹித் சர்மா கைவிட வேண்டும். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்க, நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.