இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டிஎஸ்கே!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு வாய்பை அதிகரித்தது.

News image

பொல்லார்ட், பிராவோ - படம்: டிஎஸ்கே / எக்ஸ்

Updated On :25 ஜூலை 2024, 12:00 pm IST

அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் மேஜர் லீக் கிரிக்கெட் எனப்படும் எம்.எல்.சி கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.

சிஎஸ்கே அணி போல டிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் போல மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளும் உள்ளன.

இந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க்கை ஃபாப் டு பிளெஸ்ஸி தலைமையிலான டிஎஸ்கே அணி வென்று இறுதிப் போட்டிக்கு வாய்பை அதிகரித்தது.

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் 20 ஓவர் முடிவில் 163/8 ரன்கள் எடுத்தது. டிஎஸ்கே அணி 18.3 ஓவரில் 167/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டு பிளெஸ்ஸி 72 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

டிஸ்கே அணியில் கான்வே 51*, ஆரோன் ஆர்டி 40 *ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு பொல்லார்டை பிராவோ கிண்டல் செய்தார். இவர்களது சண்டை சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தே இருக்கிறது. இருவர்களும் சிறந்த நண்பர்கள் என்பதால் ஜாலியாக கிண்டல் செய்து கொள்வார்கள்.

மற்றுமொரு பிளே ஆஃப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபீரிடம் அணியும் கம்மின்ஸ் தலைமையிலான சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணியும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.