பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம் என கனவிலும் நினைக்கவில்லை: முன்னாள் நியூசி. வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

News image

படம் | AP

Updated On :4 நவம்பர் 2024, 9:07 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றி இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகுக்கும் அதிர்ச்சியளித்தது நியூசிலாந்து. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி நியூசிலாந்து வரலாறு படைத்தது.

கனவிலும் நினைக்கவில்லை

சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நியூசிலாந்து அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராஸ் டெய்லர் (கோப்புப் படம்)

ராஸ் டெய்லர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற நாடுகளைப் போல நியூசிலாந்து அணியை நானும் ஆச்சரியமாக பார்க்கிறேன். இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து மக்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் இந்த வெற்றியில் திளைத்துள்ளனர்.

நியூசிலாந்தில் ரக்பி விளையாட்டே பிரதானமானது. கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்களை ஈர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகிறது. இலங்கைக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, கிரிக்கெட்டின் நிலை குறித்து கவலை இருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி அனைத்தையும் மாற்றியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்தில் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு வரவேற்பு அளிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, நியூசிலாந்து மக்களுக்கும், நியூசிலாந்து அணி வீரர்களுக்கும் புதிய நம்பிக்கை பிறந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக இந்த வரலாற்று வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.