புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!

பெர்த் டெஸ்ட்டில் 72 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டது தொடர்பாக...

News image

படம் | AP

Updated On :22 நவம்பர் 2024, 10:52 am

DIN

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 72 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். ஜோஸ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

72 ஆண்டுகளுக்குப் பிறகு...

பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும், இந்திய அணி 7 விக்கெட்டுகளையும் இன்று (நவம்பர் 22) ஒரே நாளில் கைப்பற்றியது. இந்த 17 விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு முன்னதாக, பெர்த் மைதானத்தில் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.