ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மெக்கல்லம் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார்.

News image

ஜெய்ஸ்வால் - படம்: ஏபி

Updated On :23 நவம்பர் 2024, 3:09 pm IST

ஓராண்டில் டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் நியூசிலாந்தின் அதிரடி வீரரும் தற்போதைய இங்கிலாந்தின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம் சாதனையை முறியடித்துள்ளார் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

இந்தாண்டில் 34 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். இதற்கு முன்பாக மெக்கல்லம் 2014இல் 33 சிக்ஸர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டுகளாக யாரும் முறியடிக்காமல் இருந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது.

ஜெய்ஸ்வால் 88, கே.எல்.ராகுல் 59 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

டெஸ்ட்டில் ஓராண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்

1. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 34 (2024)

2. பிரண்டன் மெக்கல்லம் - 33 (2014)

3. பென் ஸ்டோக்ஸ் - 26 (2022)

4. ஆடம் கில்கிறிஸ்ட் - 22 (2005)

5. வீரேந்தர் சேவாக் - 11 (2008)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.