
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். 90-100 ரன்களுக்குள் 7ஆவது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கிரிக்கெட்டில் இதற்கு நெர்வஸ் 90ஸ் என்பார்கள்.
சதம் அடிக்கும் முன்பு பதற்றத்தால் ஆட்டமிழப்பதால் இந்தப் பெயர். சச்சின் இந்த பிரச்னைக்கு மிகவும் பெயர்போனவர்.
இதுவரை 90-100 ரன்களுக்குள் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். டெஸ்ட்டில் மட்டும் 10 முறை ஆட்டமிழந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக சச்சின் 15,921 ரன்கள் குவித்துள்ளார். அதில் 51 சதங்கள், 68 அரைசதங்கள் அடங்கும்.
ரிஷப் பந்த் இதுவரை 36 போட்டிகளில் 2,551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகமுறை 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழந்தவர்கள்
1. சச்சின் டெண்டுல்கர் - 10 முறை
2. ராகுல் திராவிட் - 10 முறை
3. ரிஷப் பந்த் - 7 முறை
4. தோனி, சேவாக், கவாஸ்கர் - 5 முறை.
உலக அளவில்...
சச்சின் டெண்டுல்கர் -10
ஸ்டீவ் வாக் -10
ராகுல் திராவிட் - 10
எம்.ஜே.ஸ்லாடர் - 9
ஏ ஐ களிச்சர்ரன் - 8
ஏபிடி வில்லியர்ஸ் - 8
இன்சமாம் - 8
ரிஷப் பந்த் -7
ஹைடன் - 7
அலைஸ்டர் குக் -7
ஆர்பி கன்ஹை -6
பிரைன் லாரா - 6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.