இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் அரை சதமடித்துள்ளார்.
ஜடேஜா- அஸ்வின் கூட்டணி
144க்கு 6 விக்கெட்டுகள் எடுத்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் - ஜடேஜா இணை தூக்கி நிறுத்திவருகிறது. தனது1 5ஆவது அரைசதத்தை அஸ்வின் நிறைவு செய்துள்ளார். 61 ஓவர் முடிவில் இந்திய அணி 243/6 ரன்கள் எடுத்துள்ளது.

அஸ்வின் - ஜடேஜா - R Senthilkumar
இதில் அஸ்வின் 54* (61 பந்துகளில்), ஜடேஜா 41 (55 பந்துகளில்) ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.
இது குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா தனது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இது அவரது 15ஆவது டெஸ்ட் அரைசதம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
மண்ணின் மைந்தன் அஸ்வின்
சமூக வலைதளங்களில் அஸ்வினை ஆஷ் அண்ணா (Ash anna) என்று அழைப்பது வழக்கம். அஸ்வின் அண்ணா என்பதன் சுருக்கமாக இப்படி ரசிகர்கள் அழைப்பார்கள். இதை பிசிசிஐ பயன்படுத்தியிருப்பது தமிழர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மண்ணின் மைந்தன் அஸ்வின் நன்றாக விளையாடுவது சென்னை ரசிகர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வைபவ் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுங்கள்! - ரவி அஸ்வின்
உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த முருகன் அஸ்வின்!
சிவப்புப் பந்து போட்டிகளில் சூர்யவன்ஷி விளையாட வேண்டும்: அஸ்வின்

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |





