கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாக். முன்னாள் வீரர் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் முடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

News image

அஃப்ரிடியின் யூடியூப் சேனல் முடக்கம்.

Updated On :30 ஏப்ரல் 2025, 1:42 pm

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வருவதாகக் கூறி முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இந்தியர்கள் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்ததற்காக அஃப்ரிடியின் யூடியூப் சேனலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்காக 500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அஃப்ரிடி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்கவில்லை என்று வெறுப்புடன் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான சோயிப் அக்தர், ரஷீத் லத்தீப், பாசித் அலி, வாசே ஹபிப், ரிஸ்வான் ஹைதர், மோஷின் அலி, முனீப் ஃபாரூக், உஸைர் கிரிக்கெட் ஆகியோரின் யூடியூப் சேனல்களையும் இந்திய அரசு தடை செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.