குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

டி10 கிரிக்கெட்டில் ஆப்கன் வீரர் நிகழ்த்திய உலக சாதனை குறித்து...

The Afghanistan batter smashed 45 runs off Will Arney in a single over

ஆப்கன் வீரர் உஸ்மான் கனி. - படம்: இன்ஸ்டா / உஸ்மான் கனி.

Published On :2 ஆகஸ்ட் 2025, 2:23 pm IST

ஆப்கன் வீரர் உஸ்மான் கனி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் இசிஎஸ் டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்ஃபோர்டு அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது.

இதில் இந்த அணியில் கேபட்ன் உஸ்மான் கனி 43 பந்தில் 153 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் அடங்கும்.

கில்ட்ஃபோர்டு பந்து வீச்சாளர் வில் எர்னியின் வீசிய ஒரே ஓவரில் 45 ரன்களை எடுத்து உஸ்மான் கனி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.

ஒரே ஓவரில் 6+ நோ பால், 6, 4+ வைட், 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என மொத்தம் 45 ரன்கள் எடுத்தார்.

உஸ்மான் கனி

உஸ்மான் கனி - படம்: இன்ஸ்டா / உஸ்மான் கனி.

அடுத்து விளையாடிய கில்ட்ஃபோர்டு அணி 155/4 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்கர் மிகைல் 47, டோமனிக் 33 ரன்கள் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி வென்றது.

உஸ்மான் கனி (28 வயது) ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Afghan player Usman Ghani has set a world record by scoring 45 runs in an over.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.