திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

News image

ரிஷப் பந்த் - படம் | AP

Updated On :7 ஆகஸ்ட் 2025, 10:58 am

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-2 என சமன் செய்தது.

மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்று கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்

தனது பந்துவீச்சில் ரிஷப் பந்த்தின் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் வோக்ஸ்

கிறிஸ் வோக்ஸ் - படம் | AP

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது: இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தை சல்யூட் எமோஜியுடன் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். அதனால், அவருக்கு நான் நன்றி கூறினேன். அவரது அன்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்தேன். அவரது கால் தற்போது நன்றாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய பந்துவீச்சில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

காயத்துடன் ஓவல் டெஸ்ட்டில் நான் களமிறங்கியதை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பாராட்டினார். உங்களது தைரியம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது எனக் கூறினார். இந்த தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். உங்களது அணி சிறப்பாக செயல்பட்டது என அவரிடம் நான் கூறினேன் என்றார்.

Summary

England fast bowler Chris Woakes has said that he has apologised to Indian wicketkeeper Rishabh Pant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.