நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

தி ஹன்ட்ரட் லீக்கில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது குறித்து...

News image

கிரஹாம் க்ளார்க் - படம்: எக்ஸ் / தி ஹன்ட்ரட்

Updated On :14 ஆகஸ்ட் 2025, 2:25 pm IST

தி ஹன்ட்ரட் லீக்கில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் சிக்ஸர் அடித்து அசத்திய கிரஹாம் க்ளார்க் விடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடராகும்.

இதில் முதலில் பேட்டிங் செய்த சௌதர்ன் பிரேவ் அணி 100 பந்துகளில் 139/5 ரன்கள் எடுத்தது.

இந்த அணியில் அதிகபட்சமாக லாரி எவான்ஸ் 53, ஜேம்ஸ் கோல்ஸ் 49 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் 141/7 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக கிரஹாம் க்ளார்க் 38 ரன்கள் எடுத்தார்.

கடைசி 3 பந்தில் 5 ரன்கள் தேவையான நிலையில் இரண்டு பந்துகள் டாட் ஆக, கடைசி பந்தில் கிரஹாம் க்ளார்க் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் கிரஹாம் க்ளார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அழுத்தமான சூழ்நிலையில் சிக்ஸர் அடித்த இவரது விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Summary

Graham Clark hit a last-ball six to snatch a dramatic three-wicket victory for Northern Superchargers against Southern Brave in The Hundred at Southampton.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.