
ஆஸி. முன்னாள் கேப்டன் பாப் சிம்சன் காலமானார்!
ஆஸி. முன்னாள் வீரர் பாப் சிம்சன் மறைவு குறித்து...

பாப் சிம்சன். - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாப் சிம்சன் 89 வயதில் காலமானார்.
257 முதல்தர கிரிக்கெட்டில் 21,029 ரன்களை குவித்த இவர் ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் 4,869 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆல் ரவுண்டரான இவர் 71 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். கேப்டனாகவும் வர்ணனையாளராகவும் இருந்த இவர் கவுண்டி கிரிக்கெட்டில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
சிட்னியில் 1936-இல் பிறந்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டுக்காக அற்பணித்துள்ளார்.
இவரது மறைவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
உண்மையான கிரிக்கெட் லெஜெண்ட் இறந்துவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டர், கேப்டன், பயிற்சியாளர், தேசிய அணித் தேர்வாளர் - பாப் சிம்சன் ஆஸி. கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரம்.
அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கிரிக்கெட்டுக்கென அற்பணித்தவர். பாப் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
இவர் விளையாடிய காலத்தில் ஆஸி. அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆஷஸ் தொடர், பிராங்க் வொரெல் தொடரையும் ஆஸி. தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
RIP to a true cricket legend.
— Cricket Australia (@CricketAus) August 16, 2025
A Test cricketer, captain, coach and national selector - Bob Simpson was a mighty figure in Australian cricket, giving everything to our game.
Cricket Australia extends our thoughts and sympathies to Bobâs family and friends. pic.twitter.com/U8yGeZNmCb
Summary
Former Australia captain and coach Bob Simpson has passed away at the age of 89.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






