தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

3-வது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸி. வீரர் கொடுத்த அப்டேட்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் வீரர் பேசியுள்ளார்.

News image
- படம் | AP
Updated On :8 டிசம்பர் 2025, 12:01 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து மார்னஸ் லபுஷேன் பேசியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அடிலெய்டில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்பதில் அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இரண்டாவது போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத மூத்த சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

லபுஷேன் கொடுத்த அப்டேட்

5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும், மூன்றாவது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பது அந்த அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அடிலெய்டு ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அணியைத் தேர்வு செய்வதற்கு அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்த மாதிரியான முடிவுகளையும் எடுப்பார்கள் என மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது. ஆனால், பிரிஸ்பேனில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் கிடைத்த அனுபவங்களை வைத்து, அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பிளேயிங் லெவனை தேர்வு செய்வார்கள். அடிலெய்டு ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு சிறந்த பிளேயிங் லெவனை தேர்வுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

An Australian player has spoken about what the playing eleven for the third Test against England will look like.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.