ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஐசிசியால் தவிர்க்கப்பட்ட சல்மான் அலி அகா; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறாதது குறித்து...

News image

படம் | ஐசிசி (எக்ஸ்)

Updated On :13 டிசம்பர் 2025, 6:19 pm IST

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறாததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக ஐசிசி சார்பில் விளம்பர பதாகை வெளியிடப்பட்டது.

ஐசிசி வெளியிட்ட அந்த விளம்பர பதாகையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்பட 5 அணிகளின் கேப்டன்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. சூர்யகுமார் யாதவை தவிர்த்து, தென்னாபிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறாததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இதே பிரச்னையை நாங்கள் எதிர்கொண்டோம்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் இடம்பெறாமல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பேசிய பிறகே அந்த நிலை மாறியது. இந்த முறையும் அதே பிரச்னையை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. டிக்கெட் விற்பனைக்கான விளம்பர பதாகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனின் புகைப்படம் இடம்பெறவில்லை.

ஐசிசியின் டாப் 5 டி20 அணிகளில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. ஆனால், உலகக் கோப்பைத் தொடர்களில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஐசிசியின் விளம்பர பதாகைகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனின் புகைப்படத்தை ஐசிசி சேர்க்கும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Regarding the absence of Pakistan team captain Salman Ali Agha's photo on the promotional banner for the ICC T20 World Cup ticket sales...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.