தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

ஐபிஎல் மினி ஏலத்தில் அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாறு படைத்துள்ளது.

News image

படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :16 டிசம்பர் 2025, 2:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் மினி ஏலத்தில் அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாறு படைத்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

இந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

முக்கியமான வீரர்கள் பலரது பெயர் வந்தபோதும், அவர்களை ஏலமெடுக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டாத சிஎஸ்கே அணி இரண்டு அன்கேப்டு (சர்வதேசப் போட்டிகளில் விளையாட வீரர்) இளம் வீரர்களை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் கார்த்திக் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தலா ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்தது. இதன் மூலம், சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்போன அன்கேப்டு வீரர்கள் என்ற சாதனையை இணைந்து படைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.