நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஒரே போட்டியில் இரட்டைச் சதம், சதம் விளாசிய முதல் நியூசிலாந்தில் முதல் வீரராக கான்வே சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 575/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
மே.இ.தீ. அணி 420க்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 54 ஓவர்களில் 306/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நான்காம் நாள் முடிவில், தனது இரண்டாம் இன்னிங்ஸில் மே.இ.தீ.அணி 16 ஓவர்களில் 43/0 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணி வெல்ல 419 ரன்கள் தேவையாக இருக்கிறது.
இந்தப் போட்டியில் டெவான் கான்வே முதல் இன்னிங்ஸில் 227 ரன்களும் இரண்டாம் இன்னிங்ஸில் 100 ரன்களும் எடுத்தார்.
34 வயதாகும் டெவான் கான்வே ஒரே டெஸ்ட்டில் இரட்டைச் சதம், சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரராக இருக்கிறார்.
இதற்கு முன்பாக பலரும் இந்தச் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள். உலக அளவில் 10-ஆவது வீரராக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பிரையல் லாரா, கிரஹாம் கூச், குமார் சங்ககாரா, சுனில் கவாஸ்கர், மார்னஸ் லபுஷேன், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிப்பதால் இந்தப் போட்டி சமனில் முடிந்தாலும் தொடரை வெல்லுமென்பது கவனிக்கத்தக்கது.
Summary
New Zealand opener Devon Conway has achieved a historic feat in Test cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானை சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி!

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

அதிவேகமாக 100 கோல்கள் பங்களிப்பு..! மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை!

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




