அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இந்திய அணியின் பயிற்சியாளரை மாற்றுவதாக பரவும் செய்தி உண்மையில்லை: பிசிசிஐ செயலர்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மாற்ற உள்ளதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

News image

கௌதம் கம்பீர்

Updated On :28 டிசம்பர் 2025, 6:04 pm IST

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மாற்ற உள்ளதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறி வருவதுடன், வரலாற்றுத் தோல்விகளையும் சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்ததால், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தொடர்ந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரையும் இந்திய அணி இழந்தது.

பார்டர் - கவாஸ்கர் தொடருக்குப் பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் குறைந்தது வருவதை உறுதிப்படுத்தியது. அதன் பின், இந்திய அணியின் மீதான விமர்சனங்களும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன.

முற்றிலும் தவறான செய்தி

கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சராசரியாக செயல்பட்டு வருவதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு மாற்று பயிற்சியாளரை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் பரவின. அந்த பொறுப்புக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மனை பிசிசிஐ நாடியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மனை நியமிக்க பிசிசிஐ அவரை அணுகியதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. முக்கிய செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த செய்தியில் உண்மை இல்லை. பயிற்சியாளரை மாற்ற பிசிசிஐ முயற்சிப்பதாக பரவும் செய்தியை பிசிசிஐ நேரடியாக மறுக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், இந்த விஷயம் தொடர்பாக பிசிசிஐ எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இதைத் தவிர வேறு எதுவும் என்னால் கூற முடியாது. இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

BCCI secretary Devajit Saikia has stated that the news circulating about replacing Indian team's head coach Gautam Gambhir is completely false.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.