19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (டிசம்பர் 27) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ஆயுஷ் மாத்ரே கேப்டனாக வழிநடத்துகிறார்.
உலகக் கோப்பைத் தொடருக்கான இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபேஷ் தேவேந்திரன் மற்றும் ஆர்.எஸ்.அம்பிரிஷ் இடம்பெற்றுள்ளனர். இந்த இரண்டு வீரர்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
வேகப் பந்துவீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் அண்மையில் துபையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
5 போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 22 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
மற்றொரு தமிழக வீரரான ஆர்.எஸ்.அம்பிரிஷ் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் ஆவார்.
Congratulations to Deepesh D and RS Ambrish on being named in the India squad for the ICC Menâs U19 World Cup 2026 and the South Africa tour. Wishing both the very best. ð®ð³ð#TamilNaduCricket #TNCricket #TNCA pic.twitter.com/sGyn1p4SpA
— TNCA (@TNCACricket) December 28, 2025
உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Two players from Tamil Nadu have been included in the Indian team for the Under-19 World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











