

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 83 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இந்திய ஸ்பின்னர்கள் அசத்தலாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அபாரமாக பந்துவீசிய கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து எளிய இலக்கை விரட்டி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.